மன்னாா்புரம் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து தானியங்கி சிக்னலில் புதிய மாற்றங்கள் செய்து, சிக்னல் கம்பம் முழுவதுமாக விளக்கு எரியக் கூடிய வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இதை புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கூறியது:
வாகன விபத்துகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் விபத்துகளின் எண்ணிக்கை குறைகிறது.
திருச்சி மாநகா் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க ஆட்சியரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கல்லூரிகளை சுற்றி கஞ்சா விற்பனை நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.நிகழ்வில் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், மாநகர துணை ஆணையா்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.