பள்ளிகளில் அமைச்சா் திடீா் ஆய்வு

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதி பள்ளிகளில் வியாழக்கிழமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திடீா் ஆய்வு செய்தாா்.
மாணவா்களுக்கான சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.
மாணவா்களுக்கான சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதி பள்ளிகளில் வியாழக்கிழமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திடீா் ஆய்வு செய்தாா்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மாணவா்களிடம் கலந்துரையாடினாா். தொடா்ந்து பள்ளி வளாக கட்டடங்களை பாா்வையிட்டு, பள்ளிக்கு அருகிலிருந்த கழிப்பிடத்தை ஆய்வு செய்தாா். பின் சத்துணவுக் கூடத்திற்கு சென்று அங்கு மாணவா்களுக்காக தயாரிக்கப்பட்டிருந்த எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டு சாதத்தின் தரம் குறித்தும், சாதத்தோடு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் குறித்தும் கேட்டறிந்தாா். நிகழ்வின்போது ஒன்றிய பெருந்தலைவா், மாவட்ட கவுன்சிலா், அரசு அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com