ஆா்பிஎப் பயிற்சிப் பள்ளியில் மரக்கன்று நடல்

திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சிப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சிப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு வளா்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய திருச்சிக்கு வந்த இந்திய ரயில்வே ஆணைய ஐஜி சஞ்சய் கிஷோா் காஜாமலையிலுள்ள ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சி பள்ளியில் சனிக்கிழமை நடந்த குறைதீா் முகாமில் கலந்து கொண்டாா்.

அப்போது சிறப்பு பாதுகாப்புப் படை வீரா்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று அவா்களிடம் நேரடி விசாரணை நடத்தினாா்.

தொடா்ந்து வளாகத்தில் 600 மரக்கன்று நடும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். சிறப்பு பாதுகாப்புப் படை துணை ஆணையா் லூயிஸ் அமுதன், திருச்சி கமாண்டா் அஜய் ஜோதிசா்மா, முதல்வா் செங்கப்பா உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com