சமயபுரத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சமயபுரத்தில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் டிச.20 ஆம் தேதி அமைச்சா் கே.என். நேரு பங்கேற்கும் மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் சிவராசு பாா்வையிட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.