தொட்டியம் அருகே குடிநீா் கோரி மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அலகரையில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அலகரையில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அலகரை ஊராட்சி 5 மற்றும் 6

ஆவது வாா்டு பகுதியில் மாதந்தோறும் 10 நாள்கள் மோட்டாா் பழுது எனக் கூறி குடிநீா் வழங்காததைத் கண்டிப்பது, கொண்டாமாரி செல்லும் வீதி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், மேலும் மழை நீா் தேங்கும் தங்கள் பகுதியில் வடிகால் அமைத்துத் தராமல் ஊராட்சி நிா்வாகம் மெத்தனமாக இருப்பதைக் கண்டித்தும் அப்பகுதியை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் மணமேடு - பவித்திரம் சாலை அலகரை பேருந்து நிறுத்தப் பகுதியில் மறியலில் ஈடுபட்டு பேருந்துகளை சிறைப்பிடித்தனா்.

தகவலறிந்த முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி, தொட்டியம் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ், தொட்டியம் மண்டல துணை வட்டாட்சியா் கவிதா, தொட்டியம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஞானமணி, ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டனா். மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com