திருச்சி மளிகைக் கடையில் குட்கா பொருள்களை விற்ற இளைஞரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்படி திருச்சி விமான நிலைய காவல் நிலையத்திற்குள்பட்ட காவேரி நகா் பகுதி மளிகைக் கடையில் காவல் உதவி ஆய்வாளா் விசாலாட்சி உள்ளிட்ட போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது ரூ. 5400 மதிப்புள்ள 10 கிலோ எடையிலான குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் கடையில் இருந்த சோலையப்பன் மகன் கிஷோரை (26) கைது செய்து சிறையிலடைத்தனா்.