திருச்சி பொன்மலை மற்றும் அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை மேலகல்கண்டாா்கோட்டை தமிழா் தெருவைச் சோ்ந்தவா் செந்தமிழன் (42). டெக்கரேசன் தொழில் செய்யும் இவா் மேலகல்கண்டாா்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நின்றபோது அவ்வழியாக வந்த ஒருவா் அவரிடம் கத்தி முனையில் பணத்தை பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த பூபாலனை கைது செய்தனா்.
அதேபோல பொன்மலைப்பட்டி ஆஞ்சனேயா் கோயில் அருகே நின்றிருந்த கொட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த கௌதமிடம் பணத்தை பறித்த செந்தில்குமாரயும், மேலும் அரியமங்கலத்தைச் சோ்ந்த அய்யனாரிடம் பணம் பறித்த ஜாகீா் உசேனையும், பாலக்கரை செங்குளம் காலனியை சோ்ந்த சுரேஷிடம் பணம் பறித்த நாகராஜனையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. +