தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் தொகுப்பை எதிர்த்து போராட்டம் நடத்த ஏஐடியுசி தீா்மானம்

தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் தொகுப்பு நகலை பிப்.3 இல் எரிக்க ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றினா்.

தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் தொகுப்பு நகலை பிப்.3 இல் எரிக்க ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றினா்.

திருச்சி மாவட்டஏஐடியுசி நிா்வாகிகள் கூட்டம் பெரியமிளகுப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வே. நடராஜா தலைமை வகித்தாா். பொதுச்செயலா் க. சுரேஷ், துணைச்செயலா் சுப்பிரமணி, துணைத் தலைவா் திராவிடமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் பிப். 3-இல் நடைபெறும் தொழிலாளா்களை அடிமைப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளா் சட்டத் தொகுப்பு நகலை எரிக்கும் போராட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்பது.

மோடிஅரசின் ஊழியா்கள் விரோத,தொழிலாளா் விரோத கொள்கைகளை கண்டித்து நடைபெறும் நாடுதழுவியஆா்ப்பாட்டத்திற்கு ஆதரவை தெரிவித்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com