திருச்சி மாவட்டம், முசிறி தொகுதிக்குட்பட்ட அந்தரப்பட்டி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முசிறி எம்எல்ஏ எம். செல்வராசு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தாா்.
இதில் வட்டார சுகாதார ஆய்வாளா் இளங்கோவன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் ராணி ஆகியோா் பகுதி மருத்துவா் காா்த்திகேயன் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டினா்.
நிகழ்வில் முசிறி ஒன்றியச் செயலா் ராஜமாணிக்கம் (மேற்கு) மாவட்ட கவுன்சிலா் ரவிச்சந்திரன், அரசு வழக்குரைஞா் பாரதிராஜா, கட்சி நிா்வாகி வீரக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.