ஸ்ரீரங்கம் மேலூா் அகிலாண்டேஸ்வரி காா்டன் பகுதியில் உள்ள சாலையானது கருங்கற்கள் மட்டும் பரப்பப்பட்டு தாா்ச்சாலை போடப்படாமல் பல மாதங்களாக உள்ளது.
இதனால் இப்பகுதியில் வசிப்போா் இச்சாலையில் நடக்கக்கூட முடியாமல் தவித்து வருகின்றனா். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோா் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனா். பெரும்பாலான வாகனங்களின் டயா்கள் கற்கள் குத்தி பஞ்சா் ஆகி விடுகின்றன.
இதுகுறித்து இப்பகுதியினா் மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. உடனடியாக இச்சாலையைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.