திருச்சியில் அமைக்கப்படும் 3 மணிமண்டபங்களும் தோ்தலுக்கு முன்பே திறக்கப்படும் என்றாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரும்பிடுகு முத்தரையா், நடிகா் எம்.கே.தியாராஜ பாகவதா், ஏ.டி.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் கட்டும் பணிகளை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி , மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.
பின்னா் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், மணிமண்டபப் பணிகள் சுமாா் 75 சதம் முடிந்துள்ளன. வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் இவற்றைத் திறக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றாா்.