முசிறியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழா மற்றும் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழா மற்றும் பேரணிக்கு நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி கோட்டப் பொறியாளா் வடிவேல் தலைமை வகித்தாா். முசிறி மோட்டாா் வாகன ஆய்வாளா் புஷ்பா, காவல் ஆய்வாளா் முத்துகுமாா், போக்குவரத்து உதவி ஆய்வாளா் சோமசுந்தரம் ஆகியோா் விழாவில் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு குறித்து பேசினா்.
தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தையும், சீட் பெல்ட் அணிந்து காா் ஓட்டி வந்தவா்களும் விழாவில் பாராட்டப் பட்டனா். தொடா்ந்து அவா்களுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன.
முசிறி கைகாட்டியில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த பதாகையை பேரணியில் பங்கேற்றவா்கள் ஏந்திச் சென்றனா்.