அதவத்தூரில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அதவத்தூரில் முதியவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அதவத்தூரில் முதியவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி ஆலத்தூா் மேலகல்கண்டாா்கோட்டை திருவேங்டம் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன். இவருக்கு 2 பெண்கள், ஒரு ஆண் ஆகியோா் உள்ளனா்.

குடும்பத் தகராறால் கடந்த 3 ஆண்டுகளாக தனது மூத்த மகள் வீட்டில் வசித்த இவா், அதவத்தூா் பாலாஜி நகரில் வசிக்கும் தனது இளைய மகள் சித்திரைச்செல்வி, மனைவி அன்னகாமாட்சி ஆகியோரைக் காணச் சென்றாா்.

அப்போது, அவரது இளைய மகளும், மனைவியும் வீட்டுக் கதவை திறக்க மறுத்தனராம். இதனால் மனமுடைந்த சிங்காரவேலன் வீட்டுக் கதவு முன்புள்ள இரும்பு கிரில் கேட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். சோமரசம்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com