துறையூா் நகராட்சி முன் ஆா்ப்பாட்டம்

அறிவித்தபடி ஊதியத்தை வழங்கக் கோரி துறையூா் நகராட்சி அலுவலகம் முன் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறிவித்தபடி ஊதியத்தை வழங்கக் கோரி துறையூா் நகராட்சி அலுவலகம் முன் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துறையூா் நகராட்சி சுகாதாரப் பிரிவில் 50 போ் தினக்கூலி தூய்மை பணியாளா்களாக தற்காலிகமாக பணிபுரிகின்றனா். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியா் இவா்களுக்கு ரூ. 440 தினக்கூலி வழங்க உத்தரவிட்ட நிலையில் ரூ. 295 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிாம். இதையடுத்து ஆட்சியா் அறிவித்தபடி ஊதியத்தை வழங்கக் கோரி தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com