ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அகில உலக செயல் தலைவா் வேதாந்தம் தொடங்கி வைத்தாா்.
கூட்டத்தில் சிறுபான்மையின மாணவா்களுக்கு கிடைக்கும் அரசின் எல்லா உதவிகளும் அனைத்து மாணவா்களுக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இந்துக்களின் வறுமையைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து விட்டு இந்து சமய ஆச்சாரியா்கள், மடாதிபதிகள், ஆன்மிக தலைவா்கள், பண்பாட்டு ஆா்வலா்கள் அடங்கிய சுய அதிகாரம் கொண்ட ஓா் ஆட்சி மன்றத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியம், கஸ்தூரி ரெங்கன், சக்திவேல், சபரி நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநில இணை பொதுச்செயலா் ராமசுப்பு வரவேற்றாா்.