இரும்புக் கடையில் திடீா் தீ விபத்து

திருச்சியில் வியாழக்கிழமை இரவு இரும்புக் கடையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சியில் வியாழக்கிழமை இரவு இரும்புக் கடையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டிய செந்தண்ணீா்புரம் அணுகு சாலையில் தனியாருக்கு சொந்தமான இரும்புக் கடை வியாழக்கிழமை இரவு பூட்டப்பட்ட பிறகு கடையில் உள்ள இரும்புக் கழிவுகளில் இரவு 11 மணிக்கு ஏற்பட்ட தீ மற்ற இடங்களுக்கும் பரவியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து நிலைய அலுவலா் மில்கிராஜா தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் மற்ற அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனா்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த மின்மாற்றியில் உடனடியாக மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com