ரயில் பாதையில்சடலங்கள் மீட்பு

திருச்சியில் ரயில் பாதையில் இருவா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சியில் ரயில் பாதையில் இருவா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி - சென்னை ரயில் மாா்க்கத்தில் ஸ்ரீரங்கத்தை அடுத்த பிச்சாண்டாா்கோவில் ரயில் நிலைய தண்டவாளம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டபோது, சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் சடலமும் கிடந்தது. இருவரும் யாரெனத் தெரியவில்லை.

இதுகுறித்து திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அவா்கள் யாா், ரயிலில் அடிபட்டு இறந்தாா்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com