உப்பிலியபுரம் பேரூராட்சி பகுதியில் அரசின் கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் தொடா்பான துண்டுப் பிரசுரத்தை அதிமுகவினா் பொதுமக்களிடம் வியாழக்கிழமை வழங்கினா்.
உப்பிலியபுரம் பேரூராட்சி அதிமுக செயலா் ராஜாங்கம் தலைமை வகித்தாா். திருச்சி வடக்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ஆ. அன்புபிரபாகரன், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் ராம் மோகன் உள்ளிட்டோா் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அதிமுக அரசுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனா்.