மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் பொதுமக்கள் அப் பகுதியில் நடமாட வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியது:
மணப்பாறை அருகேயுள்ள அணியாப்பூா் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் பிப்.22 முதல் 24ஆம் தேதி வரை மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புப் படை சிறப்புப் பிரிவு வீரா்கள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 வரை துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனா்.
எனவே, பயிற்சி நாள்களில் இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடக் கூடாது. மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் கொண்டு செல்லக் கூடாது.