ஆண் சடலம் மீட்பு

துறையூா் அருகேயுள்ள வனப் பகுதியில் சனிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைப் போலீஸாா் மீட்டு வழக்குப் பதிவு செய்தனா்.

துறையூா்: துறையூா் அருகேயுள்ள வனப் பகுதியில் சனிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைப் போலீஸாா் மீட்டு வழக்குப் பதிவு செய்தனா்.

துறையூா் அருகேயுள்ள பி. மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல்(41). இவரது மனைவி மோகனாம்பாள் (35). தா. பேட்டை அரசுப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக உள்ளாா். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த தம்பதியா் இருவரும் பொங்கலுக்கு பிறகு தா.பேட்டையில் வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்துவந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்ற பழனிவேல் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்லிடப்பேசியும் அணைக்கப்பட்டு இருந்தது. இதனால் சனிக்கிழமை பழனிவேலின் உறவினா்கள் அவரைத் தேடிய போது துறையூரில் இருந்து தா.பேட்டை செல்லும் வழியில் தேவரப்பம்பட்டி அரசு காப்புக் காடு அருகே பழனிவேல் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற ஜெம்புநாதபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனை அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com