திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சிறுகாம்பூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் இப் பள்ளியும் களம் அமைப்பும் இணைந்து ரூ. 6 லட்சத்தில் அமைத்த நவீன நூலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நூலகத்தை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் எஸ். சிவராசு, நூலக வளா்ச்சி நிதியாக ரூ. 25 ஆயிரத்தையும், பள்ளியின் முன்னாள் மாணவரும் குணசீலம் ஊராட்சித் தலைவருமான குருநாதன் ரூ. 50 ஆயிரத்தையும் பள்ளித் தலைமையாசிரியா் பீ. அந்தோணி லூயிஸ் மத்தியாஷிடம் வழங்கினா்.
பின்னா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட மாவட்ட ஆட்சியா் சிவராசு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகளையும் வழங்கினாா்.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். அறிவழகன், பள்ளித் தலைமையாசிரியா்கள் துளசிதாசன் ( எஸ்ஆா்வி பள்ளி, சமயபுரம்) சரவணவேல் ( அரசுப்பள்ளி, திருவெள்ளறை) சுப. திருப்பதி, கவிஞா் நந்தலாலா, பி. சரவணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா், களம் அமைப்பினா், ஆசிரிய, ஆசிரியைகள் செய்தனா்.