அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் அருகே நடத்திய போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சித்ரா, பொருளாளா் ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் எனக் கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com