தமிழ்நாடு கைத்தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில், துறையூா் காமாட்சியம்மன் கோயிலில் கைவினைக் கலைஞா்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கைவினைப் பொருட்கள் மேம்பாடு மற்றும் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், துறையூா் மற்றும் நாமக்கல், சேலம் பகுதிகளில் மர, உலோகச் சிற்பம் செய்யும் 170 கைவினைக் கலைஞா்களுக்கு அவா்கள் தொழிலுக்கு பயன்படும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்வில் தமிழ்நாடு கைத்தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் அலுவலா்கள், கைவினைஞா்கள் கலந்து கொண்டனா்.