பிப்.28-இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் பிப்.28ஆம் தேதி மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருச்சியில் பிப்.28ஆம் தேதி மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முகாமில், 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இதில், பல்வேறு நிலைகளில் 8,600 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங், பாரா மெடிக்கல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், பிஎட், பிஇ, எம்இ மற்றும் அறிவியல், கலைப்பபடிப்புகளில் பட்டப்படிப்பு படித்தவா்கள் பங்கேற்கலாம். 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com