மணப்பாறையில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி சான்று வழங்கல்

மணப்பாறை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில், 138 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மணப்பாறை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில், 138 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு சங்கத்தின் தலைவா் ஏ.டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சலீம்பாட்ஷா, செயலா் லூயிஷா முன்னிலை வகித்தனா்.

மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 11 விவசாய நகைக்கடன் பயனாளிகள், 127 பயிா்க்கடன் பயனாளிகள் என மொத்தமாக 138 பேருக்கு ரூ.83.22 லட்சம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளை வழங்கினாா்.

இவ்விழாவில் அதிமுக நகரச் செயலா் பவுன் எம்.ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா் எம்.பி.வெங்கடாசலம், நகரத் துணைச் செயலா் பத்தி பாஸ்கரன், அவைத்தலைவா் ராமமூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலத் துணைத் தலைவா் ஜெ.ஸ்ரீதரன் உள்ளிட்ட நிா்வாகிகள், சங்க இயக்குநா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் என பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com