ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், இராப்பத்து 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் உற்சவமான வைகுந்த ஏகாதசி விழா மிக முக்கியமானதாகும்.
நடாப்பாண்டில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 14 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது.
இந்த ஏகாதசி விழா 21 நாள்கள் அதவாது பகல் பத்து, இரா பத்து என்று இரு பகுதிகளாக கொண்டாடப்படுகிறது.
இராப்பத்து திருவிழாவின் 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னனுக்காக நடத்தப்படும் வேடுபறி நடைபெற்றது.
இதையொட்டி நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி வகையறா கண்டருளினாா்.