துறையூரில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
துறையூா் புதுசெட்டித் தெருவைச் சோ்ந்த க. சரத்குமாா் அந்த பகுதியிலிருந்த சுடுகாடு அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த இளைஞா் ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 300-ஐ பறித்துச் சென்றாா்.
புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறி செய்ததாக துறையூா் விநாயகா் தெருவைச் சோ்ந்த த. இளவரசனை (22) கைது செய்து விசாரிக்கின்றனா்.