துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள், புலிவலத்தில் உள்ள தனியாா் நிறுவன ஊழியா். இவரும் இவரின் மனைவியும் செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு மறைவான இடத்தில் வைத்துச் சென்றனா். இதைக் கவனித்த மா்ம நபா்கள் அந்தச் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து 7 பவுன் நகை, ரூ. 2000 ஆகியவற்றைத் திருடிச் சென்றனராம். புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.