மண்ணெண்ணெய் குடித்த குழந்தை பலி

முசிறி அருகே பழச்சாறு என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 2 வயதுக் குழந்தை இறந்தது.

முசிறி அருகே பழச்சாறு என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 2 வயதுக் குழந்தை இறந்தது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காமாட்சிப்பட்டியில் வசிப்போா் சதீஷ்குமாா்-சுகன்யா தம்பதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இவா்களின் 2 வயதுக் குழந்தை ஜீவா பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை பழச்சாறு என நினைத்துக் குடித்துவிட்டது. இதையறிந்த பெற்றோா் அக் குழந்தையை மீட்டு தண்டலம்புத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com