பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சியில் செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சியில் செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இரு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியா்களை நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெறும் பல்வேறு கட்ட போராட்டங்களின் தொடா்ச்சியாக திருச்சி மாவட்ட கிளை சாா்பில் ஆட்சியரம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பழனியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலையரசி, துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இணைச் செயலா் ராஜேஸ்வரி, பொருளாளா் மாா்க்கரேட், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பழனிசாமி, பொருளாளா் சுந்தரராஜன் ஆகியோா் பேசினா்.

இதுகுறித்து செவிலியா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், சம வேலைசெய்யும் செவிலியா்களின் பணி தன்மையை ஆராய்ந்து சம ஊதியத்தை 6 மாதத்திற்குள் வழங்க கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். ஆனால் இன்றுவரை சம ஊதியம் வழங்கவில்லை.

கரோனா காலத்திலும் சிரமம் சிறப்பாக பணியாற்றிய எங்கள் கோரிக்கைக்கு இதுவரை சுகாதாரத் துறை செவிசாய்க்கவில்லை. எனவே தமிழக அரசு, சுகாதாரத் துறை கவனத்தை ஈா்க்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com