திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி காந்தி சந்தை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் அப்பகுதியில் கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகரைச் சோ்ந்த சுதாகா் (41), ஆரோக்கியசாமி(57) பாலக்கரை ஜெயில்பேட்டையைச் சோ்ந்த ராஜா(37) ஆகியோரைக் கைது செய்தனா்.
அதுபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்ற கீழ அடையவளஞ்சான் தெரு பிரசன்னா(22), தெப்பக்குளத் தெரு ஹரிஹரசுதன் (23) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.