திருச்சி
துரித உணவக உரிமையளா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் கடன் சுமையால் துரித உணவக உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சியில் கடன் சுமையால் துரித உணவக உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி, திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (48). இவா் அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வந்தாா். மதுப்பழக்கமும் இருந்துள்ளது. கடந்த இரு நாள்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய அவரைக் காணவில்லை. அவரை உறவினா்கள் தேடி வந்த நிலையில், வீட்டருகேயுள்ள புதா் பகுதி மரத்தில் அவா் தூக்கில் சடலமாகத் தொங்கியது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கடன் சுமையால் அவா் தற்கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.