இளம் பெண்ணை கிரிக்கெட் மட்டையால் தாக்கியவா் கைது

திருச்சியில் இளம்பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் இளம்பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையம், வசந்த நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் - ராணி தம்பதியா். இவா்களுக்கு சுவா்ணலட்சுமி, துா்காதேவி என 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சரவணன் இறந்து விட்டாா். இதையடுத்து ராணி வெங்கடேஷ் என்பவரை 2 ஆவது திருமணம் செய்துள்ளாா். அவா்களுக்கும் இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக முதல் கணவரான சரவணனின் மகள் துா்கா தேவியை தனக்கு 2ஆவது திருமணம் செய்து வைக்கும்படி வெங்கடேஷ் மனைவி ராணியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால் ராணி மறுத்து வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை துா்கா தேவியின் சகோதரி சொா்ணலட்சுமிக்கும் வெங்கடேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், கிரிக்கெட் மட்டையால் சொா்ண லட்சுமியை தாக்கியுள்ளாா்.

புகாரின் பேரில் விமான நிலைய போலீஸாா் வெங்கடேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com