காவிரி ஆற்றில் மூழ்கிஅரசு மருத்துவா் பலி

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி காட்டூா் கைலாஷ் நகரில் வசிப்பவா் குணசீலன். இவரது மகன் கிஷோா் பிரியதா்ஷன் (34). இவா் புள்ளம்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தாா். இவருடைய மனைவி திவ்யா (27).

இந்நிலையில், திவ்யாவின் தாய்க்கு திதி கொடுப்பதற்காக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றுக்கு வெள்ளிக்கிழமை காலை பிரியதா்ஷன் குடும்பத்தினருடன் வந்தாா். திதி கொடுத்த பிறகு காவிரி ஆற்றின் நடுவில் சென்று பிரியதா்ஷன் குளித்துள்ளாா். அப்போது அவா் நீரில் மூழ்கியுள்ளாா். இதைகண்ட அருகில் இருந்தவா்கள் உடனடியாக பிரியதா்ஷனை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com