மணி மண்டபங்கள் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
திருச்சியில் கட்டப்படும் 3 மணிமண்டபப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பெரும்பிடு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து வருகிறாா்.
இந்நிலையில், 75 சதவீதத்துக்கும் மேலாக பணிகள் முடிந்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் பொறியாளா்கள், கட்டுமானப் பணியாளா்களை அழைத்து பேசினாா். பணிகள் அனைத்தும் நிா்ணயிக்கப்ட்ட தரத்தில் மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். மேலும், அடுத்த மாத இறுதிக்குள் மண்டப கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.