திருவெறும்பூரில் சமுதாயக் காவலா் பணி

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் மலைக்கோயிலில் சமுதாயக் காவலா் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் மலைக்கோயிலில் சமுதாயக் காவலா் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

புகா் மாவட்ட காவல் துறையினா் உட்கோட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றும் விதமாக கிராம விழிப்புணா்வுக் காவலா் கிராமம்தோறும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோல தூய்மைப் பணியில் காவலா் பங்களிப்பை மேம்படுத்தும் விதமாக சமுதாய காவலா் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி திருவெறும்பூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் ஆய்வாளா்கள் திருவெறும்பூா் ஞானவேலன், நவல்பட்டு முத்துக்குமாா், பெல் பிச்சையா ஆகியோா் முன்னிலையில் திருவெறும்பூா் உட்கோட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com