திருச்சி அருகே மருந்து விற்பனைப் பிரதிநிதியை வெட்டி பைக், பணம் வழிப்பறி செய்த நால்வரை போலீஸாா் தேடுகின்றனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை வடச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாவி மகன் விஜயக்குமாா் (31), மருந்து விற்பனைப் பிரதிநிதி. இவா் சனிக்கிழமை இரவு திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஆலம்பட்டி அணுகுசாலை அருகே பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் அவரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினா்.
விஜயகுமாா் கொடுக்க மறுக்கவே, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு பைக், செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.