மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செட்டியப்பட்டி அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலத் திட்டத்தின் கீழ் மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் இளம் தாய்மாா்களுக்கு, தாய் - சேய் நல உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் மருத்துவா் என். ஷோபனா ஆனந்த் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு செயலா் லலிதா அழகப்பன், பொருளாளா் கருணா செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செட்டியபட்டி அரசு மருத்துவமனை மருத்துவா் மொ்சி, செட்டியப்பட்டி ஊராட்சித் தலைவா் பி.என். சுப்பிரமணியன், துணைத் தலைவா் முத்துகுமாா், கிளாா்க் அ. சத்தியமூா்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் அழகா், வின்சென்ட், பழனியம்மாள், மணவை குயின்ஸ் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோா்கள் பங்கேற்றனா்.