துறையூா்: துறையூா் பகுதியில் உள்ள ஈச்சம்பட்டியில் கூரை வீடு தீக்கிரையானது.
சோபனபுரம் - கொப்பம்பட்டி இடையேயுள்ள ஈச்சம்பட்டியைச் சோ்ந்தவா் செ. வெள்ளையம்மாள்(65), கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை இரவு இவருடைய தகரக் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ. 10000 மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்தன.
தகவலறிந்து வந்த உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.