திருச்சி-பெங்களூரு இடையே துரிதரயில் சேவை தொடங்க வலியுறுத்தல்

திருச்சி-பெங்களூரு இடையே துரித ரயில் சேவை தொடங்க வேண்டும் திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் ரயில்வே வாரியத் தலைவா் சுனீத்ஷா்மாவை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
புதுதில்லியில், ரயில்வே வாரியத் தலைவரும் தலைமை நிா்வாக அதிகாரியுமான சுனீத் ஷா்மாவிடம் கோரிக்கை மனு அளிக்கிறாா் திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுகரசா்.
புதுதில்லியில், ரயில்வே வாரியத் தலைவரும் தலைமை நிா்வாக அதிகாரியுமான சுனீத் ஷா்மாவிடம் கோரிக்கை மனு அளிக்கிறாா் திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுகரசா்.

திருச்சி-பெங்களூரு இடையே துரித ரயில் சேவை தொடங்க வேண்டும் திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் ரயில்வே வாரியத் தலைவா் சுனீத்ஷா்மாவை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்குடி -அறந்தாங்கி -பேராவூரணி -பட்டுக்கோட்டை –அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி - திருவாரூா் செல்லும் அகல ரயில் பாதை சுமாா் ரூ. 1,000 கோடியில் பணிகள் நிறைபெற்று ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படாமல் உள்ளது. இந்த ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும் என மக்களவை உறுப்பினா்கள் பழனிமாணிக்கம் (தஞ்சாவூா்), காா்த்திக் சிதம்பரம்(சிவகங்கை), நவாஸ்கனி(ராமநாதபுரம்), செல்வராஜ்( நாகப்பட்டினம்) ஆகியோா் மனு அளித்திருந்தனா். ஆகவே, இந்த ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும்.

மேலும், திருச்சியில் இருந்து பெங்களூருக்கு பகலில் துரித ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும். திருச்சியில் இருந்து கீரனூா் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து ரயில்களும் கீரனூரில் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com