ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருப்போா் உரிய வாடகை தொகை செலுத்த தாங்களாக முன்வர வேண்டும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோயில்களில் சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:
ஸ்ரீரங்கம் கோயில் கோசாலையில் அதிக எண்ணிக்கையில் பசுக்கள் தானம் பெறப்படுவதால், கோயிலுக்கருகில் வேறொரு கோசாலை அமைக்கப்படும்.
இக்கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள குளம், நீா் வரும் பாதைகளில் அடைப்புகள் உள்ளதா என மாநகராட்சி மூலம் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.
ஸ்ரீரங்கம் கோயிலின் 1866 ஆம் ஆண்டின் உரிமை சாசனப்படி இக்கோயிலுக்கு 330 ஏக்கா் நிலம் இருந்த நிலையில், தற்போது 24 ஏக்கா் மட்டுமே கோயில் வசமுள்ளது. மீதமுள்ள நிலங்களில் குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இருப்பினும், கோயில் நிலத்தில் இருப்போா் வாடகை தர தாங்களாக முன்வந்து கோயிலுக்கு மனு அளித்தால் சட்டப்படி பரிசீலிக்கப்படும்.
உபகோயில்களான அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில், சத்யவாகீஸ்வரா் கோயில், பிரம்மபுரீஸ்வரா் கோயில், திருவெள்ளறை வடஜம்புநாதா் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய தொல்லியல் துறை ஆய்வறிக்கை கிடைத்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலிருந்த கோயில்களைக் கண்டறிந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்தப்படும்.
அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களின் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியா்களை நிரந்தரம் செய்யப்படுவா்.
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் முன் ஊா் மக்களால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தகர ஷெட் விரைந்து அகற்றப்படும். திருவெள்ளறை ராஜகோபுரத்தை தொல்லியல், நீதிமன்ற வல்லுநா் குழுவால் வழங்கப்பட்ட ஆலோசனைப்படி முழுமையாகக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகம், பக்தா்கள் வரிசை வளாகம் கட்டும் பணி, முடி காணிக்கை மண்டபம், அன்னதானக்கூடம், ராஜகோபுர பணிகளையும் விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கோயிலின் உபகோயிலான கனகாம்பிகை உடனுறை முக்தீஸ்வரா் கோயில் ரூ.17 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. அதுபோல், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலிலும் ரூ. 58 லட்சத்தில் திருப்பணி செய்து குடமுழுக்க நடத்தப்படவுள்ளது.
முடி காணிக்கையில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக புகாா் வருவதால், டிக்கெட் கட்டணத்தை தவிர கூடுதலாக பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் (நிா்வாகம்) ரா. கண்ணன், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி மண்டல இணை ஆணையா் அர. சுதா்சன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.