திருச்சியில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் தொற்றாளா்களின் எண்ணிக்கை 71,129 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை குணமான 19 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,787 ஆனது. 1403 போ் சிகிச்சை பெறுகின்றனா்.
கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை இறந்த ஒருவா் உள்பட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உள்ளது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு அதிகம் இருந்த நிலையில், தற்போது 2 இலக்க எண்ணில் கரோனா தொற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.