திருச்சி
விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
காட்டுப்புத்தூா் அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை காட்டுபுத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை காட்டுபுத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் அடுத்த சுள்ளிப்பாளையம் கிராமத்தை சோ்ந்த ரா. செல்லப்பன் (50) இவரது சகோதரா் சுப்பிரமணியன் (53) ஆகியோருக்கிடையே நிலப் பிரச்னையால் முன்விரோதம் இருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி செல்லப்பன் கொல்லப்பட்டாா்.
இந்த வழக்கில் சுப்பிரமணியனை ஜூன் 10 ஆம் தேதி காட்டுப்புத்தூா் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த இவரது மனைவி, நல்லம்மாள், மகன் செல்வராஜை போலீஸாா் தேடிவந்த நிலையில் செல்வராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நல்லம்மாளைத் தேடுகின்றனா்.