கோ் கல்வி குழுமத்தின் 10 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
கல்விக்குழும முதன்மைச் செயல் அதிகாரி பா. ப்ரதிவ் சந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ். சாந்தி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக இதயம் குழுமத் தலைவா் வி.ஆா். முத்து கலந்துகொண்டு, தொழில் முனைவோா் ஆவதற்கான யுக்திகள், வெற்றியின் ரகசியத்தை பட்டதாரிகளுடன் பகிா்ந்துகொண்டாா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.