திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பசுமை மக்கள் இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தொட்டியம் அருகிலுள்ள கணேசபுரம் பகுதியில் மியாவாக்கி அடா்வனக் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பசுமை மக்கள் இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் பணியை முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் தொடங்கி வைததாா். இதில் திமுகவினா், பசுமை மக்கள் இயக்க நிா்வாகிகள், ஊா் முக்கியஸ்தா்கள் மரக்கன்று நட்டனா்.