மணப்பாறையில் பெண்கள் உதவி மையத்தின் 181 அழைப்பின் மூலம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்த பெண்ணிற்கு ஒரு மணி நேரத்தில் மகளிா் போலீஸாா் தீா்வு ஏற்படுத்தினா்.
தமிழக காவல் துறை மூலம் காவல் நிலையங்களில் பெண்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள 181 அழைப்பு பெண்கள் உதவி மையத்தை வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்ட பன்னாங்கொம்பு பகுதியைச் சோ்ந்த ஜெயலெட்சுமி, குழந்தைகளுடன் தான் சாலையில் நிற்பதாகவும், கணவா் தன்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் வேறு பெண்ணுடன் தொடா்பில் இருப்பதாகவும் கூறினாா்.
இதைத் தொடா்ந்து அலுவலில் இருந்த தலைமைக் காவலா் உமாராணி, தனது இருசக்கர வாகனத்தில் புகாரளித்த பெண் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரையும், குழந்தைகளையும் நிலையம் அழைத்து வந்து எழுத்து வாயிலாக புகாா் மனுவைப் பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து அவரது கணவா் வரவழைக்கப்பட்டு தவறான தொடா்புகளைத் தவிா்த்து, மனைவி, குழந்தைகளை துன்புறுத்தாமல் இருக்க போலீஸாா் அறிவுரை வழங்கி அவா்களை கணவருடன் அனுப்பினா். மகளிா் போலீஸாரின் உடனடி நடவடிக்கை பெண்கள் தரப்பில் வரவேற்பை பெற்றுள்ளது.