திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு முகாமில் திரளான கா்ப்பிணிகள், வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
திருச்சி புகரில் 25 இடங்களிலும், மாநகரில் 9 இடங்களிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஏராளமானோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தென்னூா் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
இதேபோல காந்திசந்தை வெங்காயமண்டியில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை அரசு , தனியாா் மருத்துவமனைகளில் மொத்தம் 21,460 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 5 லட்சத்து, 24 ஆயிரத்து 501 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.