நகைக் கடையில் நூதன திருட்டு

 திருச்சியில் நகைக் கடைக்கு வந்த பெண் 5 பவுன் நகையை நூதன முறையில் திருடிச் சென்றது குறித்து கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

 திருச்சியில் நகைக் கடைக்கு வந்த பெண் 5 பவுன் நகையை நூதன முறையில் திருடிச் சென்றது குறித்து கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி) சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கடந்த 9ஆம் தேதி நகை எடுக்க ஒரு பெண் வந்தாா். அவரிடம் ஊழியா்கள் நகைகளை பாா்வைக்கு வைத்தனா். அப்போது மேஜையில் இருந்த நகைகளோடு, தான் கொண்டு வந்திருந்த போலி நகையை வைத்துவிட்டு, அதற்கு பதிலாக அங்கிருந்த 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றுவிட்டாா். இதுகுறித்து கடையின் விற்பனைப் பிரதிநிதி காசிநாதன் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அப்பெண்ணைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com