திருவானைக்கா பகுதியில் ஊஞ்சல் விளையாடியபோது கழுத்து இறுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி சனிக்கிழமை மாலை இறந்தாா்.
திருவானைக்கா கீழக்கொண்டையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகள் நித்யஸ்ரீ (9). அருகிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் கடந்த 12 ஆம் தேதி வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது ஊஞ்சல் கழுத்தை இறுக்கியதில் மூச்சுத் திணறி மயங்கிய நித்யஸ்ரீ, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.