திருச்சியில் லாட்டரி விற்ற காங்கிரஸ் பிரமுகா் உள்பட இருவரை கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் கோட்டை காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் கோட்டை காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றபோது எஸ்ஆா்சி சாலையில் உள்ள பூக்கடையில் லாட்டரி விற்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து கடையில் இருந்த தென்னூா் சாஸ்திரி சாலை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முகிலனை (32) கைது செய்து விசாரித்தனா். அதில் வாத்தலை அருகே உள்ள கல்லூா் பகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் சீனிவாசன்(30) மொத்த விற்பனையில் கேரள லாட்டரியை ஆள் வைத்து விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து சீனிவாசனை கோட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.